“I don’t remember how we happened to meet each other.
I don’t remember who got along with whom first.
All i can remember is all of us together”…..
Love is like “missed call” it stops when u try to catch,But
Friendship is like “scrap” bcoz it comes & stays inside ur scrapbook untill u delete it.
If friends were flowers I would not pick you! I’ll let you grow in the garden & cultivate you with love and care so I can keep you as a friend 4ever!!
SWEETLINESS:
Kadhaliyin kannasaivuku 1000 arthangal..
aanaal nanbanin kannasaivuku orae arrtham
“Machan super figure varuthu takunu thirumbi paarru
அமைதியான இரவு..
சில்லேன்ற காற்று..
அலைகளின் தாளம்..
படகு மறைவில் காதல் ஜோடிகள்..
இருவர் மட்டும் வெட்டவெளில்..
அவன் தோளில் அவள் தலை சாய்ந்து
விசும்பி கொண்டு இருக்கிறாள்..
சமுகம் அவர்களை கேலி செய்தது
கள்ள காதல் என்று..
எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணிர்
ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!
புன்னகையை சுமந்து
புன்னகையை சுமந்து வருகிறாள்
அறிமுகம் இல்லாமலே – என்
அகம் தொட எத்தனிக்கிறாள்.
எப்படியும் முடிகிறது – அவளின்
உலகத்தினுள் எனை கடத்த
ஜன்னல் வெளி பேசுகிறாள்
பறந்து சென்ற பறவைக்காக
அவள் சொன்ன கதைகளையெல்லாம்
புன்னகையை சுமந்து வருகிறாள்
அறிமுகம் இல்லாமலே – என்
அகம் தொட எத்தனிக்கிறாள்.
எப்படியும் முடிகிறது – அவளின்
உலகத்தினுள் எனை கடத்த
ஜன்னல் வெளி பேசுகிறாள்
பறந்து சென்ற பறவைக்காக
அவள் சொன்ன கதைகளையெல்லாம்
டெடிபீர் பொம்மைகள்
எனக்கு தெரிந்திடாத வண்ணம்
எங்கே ஒளித்து வைத்துள்ளதோ!
முகத்தை சுழித்து நாக்கை துருத்தி
அவளுக்கான சில்மிசங்கள்
வெறுமையை ஆக்ரமிக்கிறது.
பொம்மையை தட்டிக்கொடுத்து
கண்ணயரசெய்த பின்னே
பெரியமனுசி கொட்டாவி விடுகிறாள்
அவளுக்கான உலகில்
என்னற்ற ரகசியங்கள்
புதைந்து கிடக்கின்றன
ஏப்போதாவது ஒன்றுதான்
என்னால் தோண்டியெடுக்கப்படுகிறது .
நம் நட்பு
நம் நட்புக்கு
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லும் இச்சமூகம்
நமக்குத் தெரியும்
நம்மிடம் இருப்பது
நட்பு மட்டும் தான்
நட்பைத் தவிர
வேறொன்றுமில்லை என்று.
பேருந்து நிறுத்தம்
அந்த பேருந்து நிறுத்தத்தில்
மணிக்கணக்காய்
பேசிக்கொண்டு இருந்தோம்
எத்தனை பேருக்கு
புரிந்திருக்கும்
நாம் நண்பர்கள் என்று.
உறவு
உன் கைபிடித்து
நடக்கத் துவங்கிய
அந்த நாளில் தான்
உணர்ந்தேன்
ஆண் பெண் உறவில்
காதலையும் தாண்டி
நட்பு என்று
ஒன்று உள்ளதென்று.
விசாரிப்பு
உன்னைச் சந்திக்க
வரும்போதெல்லாம்
எனைப் பார்த்து குரைக்குமே
உன் வீட்டு நாய்,
அதை மிகவும்
விசாரித்தேன் என்று
சொல்.
தோழி
இலக்கியம், இதழியல்,
புரட்சி, சமூகம்,
அரசியல், காதல்,
நட்பு, பாசம்,
வறுமை, சினிமா,
பட்டினி சாவுகள்,
இசை, கடிதங்கள்,
உன் காதலன், என் காதலி,
என்று என்னதான்
பேசவில்லை நாம்
ஒரு தோழி இருப்பது
எத்தனை செளகர்யம்....
நட்பூ
இன்றும் கூட
நினைத்துக் கொண்டிருக்கிறேன்
நீ என்றாவது
ஒரு நாள் வருவாய்
உன்னால் முறிந்து
போன நட்பில்
மீண்டும் பூ பூக்குமென்று...
-----
அன்று
உனக்கும் எனக்கும்
ஏதோ சின்ன மனவருத்தம்
நெடுநேரம் நிலவிய
இறுக்கமும் மௌனமும்
உடைந்தது
எதற்காகவோ
நாம் கைகோர்த்துக் கொண்ட
அந்த நொடிப் பொழுதில்....
சாட்சி
நம் உறவையொத்த
சந்தேகப் பார்வைகளுக்கு
சாட்சியாய்
கைகோர்த்துக் கொண்டு
நிதானமாய் நடந்து
பேசிக் கொண்டிருந்தோம் நாம்.
நம் நட்பு
உன் கணவனுக்கும்
என் மனைவிக்கும்
புரிந்து கொள்ளும்
பாக்கியம் கிடைக்குமா
நம் நட்பை?
தோழி
தோழி
நம் நட்பின் ஆழம்
நமக்கு மட்டும்
தான் தெரியும்
எத்தனை பேச்சுக்கள்
எத்தனை சண்டைகள்
எத்தனை கோபங்கள்
என் துயரங்கள்
அனைத்தையும்
கனவுகள் சுமந்து வரும்
உன் கண்கள்
மறக்கடித்து விடும்
இந்தக் கல்லூரி
மதிற் சுவருக்குள்
பயங்களோடு வந்த
எனக்கு நம்பிக்கையின்
சிறகுகளைத் தந்தவள் நீ
நட்பின் கதவுகளை
திறந்து விட்டவள் நீ
ம்ம்ம்
வார்த்தைகளின்
வர்ணஜாலங்கள் மூலமாய்
நம் நட்பை
சொல்லி விடத்தான்
நினைக்கிறேன்
வார்த்தைகள் தீர்ந்து
வலி மட்டுமே
மிஞ்சுகிறது....
நட்பின் இலக்கணத்தை மாற்றும் காலமிது
நட்பிற்கு விலை கேட்கும் மனிதர்கள்
நண்பா கவனமாயிரு
நட்பை விற்று விடாதே
கோடி வருடமானாலும் உன்னால்
மீளப்பெற முடியாது ..
நண்பி.... நண்பி.....
நட்பு....
சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு
உன்னை காணும் வரை
ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே
அன்பு காட்டும் உலகில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன்
அன்பை எண்ணி வியந்து போகிறேன்....
நண்பி.........
மொழிகளோ....
தூரங்களோ........
வயதோ.......
மற்ற எதுவுமே - நட்பை
எதிர் பார்ப்பதில்லை...
உன்னாலே புரிந்து கொண்டேன்..
என் வாழ்க்கைத் தோட்டத்தில்
எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால்
உன் நட்பைப்போல் எதுவும்
மலர்ந்து மணம் வீசவில்லை
கால வெள்ளத்தில்
சிதறுண்டு போகும் உறவுகளில்
நண்பி.............தொடர்வாயா
உன் நட்பை
இறுதி வரை..........?
மரணமே வந்தாலும்
அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல
நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக
புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை
நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது
நட்பிற்கு முகமில்லை
எப்போதும் கண்கள்
பார்த்துப் பேசும்
பழக்கம் எனக்கு.
முகம் பாராமல்
நட்பொன்று வளரலாம்
என்பதே தொலைபேசியில்
நீ அறிமுகமானபோதுதான்
தெரிய வந்தது.
உன் குரல் வசீகரமும்
சரளமான பேச்சும்
உனக்கோர் முகத்தை
என் மனதில் வரைந்தது.
நீயும் எனக்கோர்
முகம் வரைந்திருப்பாய்.
நம் நட்பு வளர்வதில்
உடன்பாடுதான் என்றாலும்,
சந்திப்பு நிகழ்வதில்
உடன்பாடில்லை.
உனக்கான என் முகமும்
எனக்கான உன் முகமும்
அழிந்து போவதில்
எனக்கு விருப்பமில்லை
அன்புடன் நட்பு…
எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும்
காதல்
எழுத்துப் பிழையின்றி
வாசிக்க நினைக்கும் நட்பு
*
என் நண்பனை
அறிமுகப்படுத்தினேன்
சந்தோசப்பட்டனர்
என் நண்பியை
அறிமுகபடுத்தினேன்
சந்தேகபட்டனர்
*
காதலி கொடுத்த பூ
வாடிப்போனது
நண்பி கொடுத்த பூ
வாடவில்லை
அதுதான் நட்பு
*
காயப்படுத்திய கரம்
நட்பென்றாலும் அதே
கரத்தையே தேடும்
குணப்படுத்த நட்பு
Thursday, July 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment